தமிழ்குடி ஒற்றுமையே!

தமிழனத்தின் விடுதலை!

புலம்பெயர் தேசம்

புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன.

பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:

1. அம்மைச்சி (நாடகம்)

2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)

3. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)

4. எது பழிப்பு, குயில் (1948)

5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)

6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்)

7. கலை மன்றம் (1955)

8. கற்புக் காப்பியம், குயில் (1960)

9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்)

10. நீலவண்ணன் புறப்பாடு

11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967)

12. பெண்கள் விடுதலை

13. விடுதலை வேட்கை

14. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)

15. ரஸ்புடீன் (நாடகம்)

இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் 86 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுள்ளார்

அவர் எழுத்துகளில் புகழ்பெற்ற வரிகள்:

"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே"

எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே

இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே

செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்

சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

தமிழினத்திற்காக தமிழுக்காகவும் இன உணர்வுகளை வளர்க்கும் பல படைப்புகள் அற்பணிப்புகள் செய்த தமிழறிஞர் பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பெருமை படுத்துகிறது!

புரட்சிகவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

#தமிழர்குடிகள்

#தமிழர்குடிகள்_கூட்டமைப்பு

#Tamilarkudigal

#பாரதிதாசன்

301599379903132490401.jpg

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *





பிரபலமானவை